Tuesday 7 August 2012

ஞானி

ஒரு துளி விழுந்து  இயற்கையின் விங்கானத்தால் விளைந்தத வினை இது
எவனதோ வினை பயன்..
வெளிச்சமும் இருட்டும் தோற்றும் ஜெயித்தும் ஓடிக்கொண்டிருக்க
எனக்கும் முளைத்தது கால்கள் ஓட


வரவில்லை வாழ்க்கை மலர் தொடுத்த மாலையாய்
மலர் தேட முள்ளே சிக்கின
விரல் நீட்டி வலி காட்ட யாரும் இல்லை..
வரவும் இல்லை வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறையோடு..

நெருப்பை தொட்டும் நீரை விட்டும் அறிந்தேன் வாழ்க்கையை..
ஆயிரம் மதங்கள், பல்லாயிரம் வழக்கங்கள்,
புதிராயிருந்தது எல்லாம்..
ஒரு இறைவன் உண்டேன்றன்.. ஒருவன் எங்கென்றான்.. இன்னொருவன் தெரியாதென்றான்..

நடந்தேன் பாதை தெரியமால்.. ஒருவன் இது தான் வழி என்றான்..
நடந்தேன் சிறிது தூரம்.. இது அல்ல வழி என்றான் இன்னொருவன்..
விளங்கவில்லை எதுவும்..
சிரித்தேன்.. அழுதேன்.. புலம்பினேன்..பித்தனாயிப்போனேன்
ஞானி என்றான் என்னிடம் கேட்காமலே..

No comments:

Post a Comment