Wednesday 1 August 2012

இறுதி மூச்சு..

இதோ இன்னும் சில நிமிடங்களில்...
இறுதி மூச்சை இழுத்து கொண்டு...
தான் வாழ்ந்த கலங்களின் எண்ணிக்கை தெரியா அறியாமை
சாதனைகள் செய்யவில்லை என வேதனையில் பிரகாசிக்கும் முகம்

உடல் கருது.. உள்ளம் கருது..எலும்புகளின் அணிவகுப்பாக
உழைப்பை மட்டுமே கண்ட தேகம்
தசை தளர்ந்து போய்.. அவர் மனது போலவே
நினைவுகள் தொலைந்து போய்
காற்றோடு உறவாடும் தேகம்

மனித சந்தடி பிடிக்காமல் போய்
உறவு சங்கிலியை அறுத்தெறியும் அவசரம்
புதிய உறவுகளை தேடிச்செல்லும் துடிப்பு
எத்தனை எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றங்களாய்

தொலைத்து  விட்ட நிம்மதியை தேடி தேடி எங்கோ பயணம்
விழிகள் கட்டப்பட்டு வலி தெரியா பயணம்
மீள முடியா இடத்திற்கு மீளும் பொருட்டு பயணம்
என் மீது அன்பு வைத்த ஜீவன் இன்று அன்புக்காக
அமைதிக்காக நெடுந்தூரம் பயணம்
முடிவில்லா பயணம் முடியுமா இந்த கல்லறையில்

பற்கள் பிரிவுகாகிதம் எழுதி பலநாட்கள் ஓடிப்போனது
ஓடி ஓடி ஒய்ந்து போய் அமைதியாய் உறங்கும் நேரம்
இத்தனை கால வாழ்க்கைக்கு நியாய தீர்ப்பு வழங்கும் நேரம்
கல்லறை சுவற்றில் ஒரு பிரிவுகாகிதம்.. வேண்டுகோளோடு
நீ எனக்கு நண்பனாய் வர வேண்டுமென்று....

2 comments: