Friday 3 August 2012

விவசாயி

கார் மேகம் பொய்த்ததனால்
பொட்டல் காடுகளும் வளர்ந்ததிங்கே
இங்கு தேர் ஒட்டி தேர் ஒட்டி திருவிழாவும் கொண்டாட
ஏர் ஓட்டும் உழவநெல்லாம்
ஓர் நாள் ஓட்ட படும் பாடு கண்டீரோ

தார் ரோட்டில் காசு பண்ணி
கார் ஓட்டும் மந்திருக்கு
கடிதம் எழுதி கலைத்திட்டனர் உழைத்தவரே
ஏறு ஏறு என்று ஏற்றி விட்ட உழைப்பாளியை
ஏறி நின்ற மந்திரியும் எட்டி கூட பாக்கவில்லை

நார் நாராய் கிழிந்த பின்னும்
நாய்கள் போல் அலைந்த பின்னும்
சோறும் கிடைக்கவில்லை சோகம் தின்று கொளுக்கிறதே
சேரும் செகதியும் இத்தேசத்தில் இல்லையென்றால்
வாயும் வயுரும் உனக்கிருந்தும் பயனேதும் இல்லையப்பா
பேரும் புகழும் பெற்று பல பேர் பிழைத்தாலும்
ஏழை உழவர்க்கு வழியேதும் இல்லையப்பா

சாறு வடிந்த கரும்பாய் சக்கையாய் கிடக்கும்
ஏழை மக்கள் போர் தொடுக்க முன்வந்து
பொங்கி எழுந்து நின்றாலே
பேர் ஆனந்தம் பெற்று பாரத அண்ணை
பெருமையுடன் நடப்பாளே !!!

No comments:

Post a Comment