Thursday 2 August 2012

புலம்பல்!

நட்புக்காய் வாழும் இதயம்
பிரிவுகளே வந்து தாக்கும்
பூத்து மனம் பரப்பும் போதா வேட்டையாடபடுவது
இனி இந்த நந்தவனம் பூக்குமா ?

நெஞ்சின் ஈரம் காய்ந்து போனது
துயரை சொல்ல வார்த்தையில்லா நிலை
சோக மூட்டையை பொதி சுமக்கும் கழுதையாய்
இன்று நான்....

ஏ நிலவே ! என் சிந்தனை பெட்டகமே
இனி நீ காயதே  ஒய்ந்து போ
என் துயரங்கல் உன்னையும் தவிக்க வைக்கும்
ஒளியை விட்டு ஒழியட்டும் !

ஏ தென்னையே ! நானும் உன் சொந்தமாகிவிட்டேன்
உன் போலவே தனித்து நிற்கிறேன்
என் கற்பனை குதிரைகள் இன்று காலொடிந்து நிற்கிறதே
இன்று என்னிடம் உயிரில்லை,  என் எழுதிக்களிடம்..

என் பேனா மையை துயரத்தில் நிரப்பி
 பிரிவுக்காகிதம் எழுதுகிறேன்
என் பேனா முள் கூட ஒடிந்த போனது!
என் கையெழுத்து கூட கசங்கிப்போனது!

இக்காகிதங்கல்கூட சோகத்தை அப்பிக்கொண்டன !
என் கனவுகள் கூட கண்ணீர் சிந்துகின்றன
இனி என் நாட்கள் அர்த்தமாகுமா?
என் கிறுக்கல்களிலிருந்து நான் அன்னியப்படுகிறேன்

என் சிந்தனைகள் சிறகொடிந்து நிற்குதே !
அப்புன்னகேயே இப்பிரிவால் புண்ணாகிப்போனது
நாட்கள் எண்ணப்படுகின்றன
என் வானில் இனி தேய்பிறை தானோ?
இனி இந்த வெண்ணிலா முகம் காட்டுமோ ?

என் கண்களில் பிரசவம் சம்பவிக்குமோ என்றொரு ஐயம்
பிரியமானவர்களே பிரியதானோ! மனம்தேற்றிகொண்டேன்
நிஜங்கள் பிரிந்தாலும் நிழல்கள் என்னோடுதான்..
சமாதனம் அடைவதற்காய்...
தூங்கிபோவேன் கனவில்லாமல் இனி..

No comments:

Post a Comment